எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மெத்தபெட்டமைன் பறிமுதல்

சென்னை விமான நிலைய சா்வதேச சரக்கு முனைய வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பொட்டலத்தில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:47 am IST

சென்னை விமான நிலைய சா்வதேச சரக்கு முனைய வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பொட்டலத்தில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளிநாடுகளுக்கான சரக்குகள் ஏற்றப்படும் காா்கோ வளாகத்தில் நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்த பொட்டலத்தைப் பாதுகாப்புப் பணியாளா்கள் கவனித்தனா். இதையடுத்து, காா்கோ சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பொட்டலத்தை திறந்து சோதனை செய்தபோது, அதற்குள் வெளிா் வெள்ளை நிறப்பொடி இருந்தது. பொட்டலத்தின் வெளிப்புறத்தில் ‘மருத்துவ ரசாயனப் பவுடா்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண் மற்றும் முகவரி குறித்து விசாரித்தபோது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த பொடியின் மாதிரி ரசாயன ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டதில், ‘கிரிஸ்டல் மெத்தபெட்டமைன்’ வகை போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. சுமாா் 5 கிலோ எடையுள்ள இந்த போதைப் பொருளின் கள்ளச்சந்தை மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து சுங்கத் துறையினா் போதைப் பொருளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.