புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணிப்பூரில் விடிய விடிய சோதனை: ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்...

News image

ஆயுதங்கள்

கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2025, 2:17 pm

DIN

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 13 இரவு தொடங்கி ஜூன் 14 காலை வரையில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் காவல் துறை, சிஏபிஎஃப், ராணுவம், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படைகளைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கலவரம் , வன்முறையால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத் துறையிடமிருந்து வந்த தகவலையடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், காக்சிங், தௌபால் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் பல கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(ஜூன் 14) தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.