நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

(கோப்புப் படம்)

Updated On :17 ஜூன் 2025, 7:42 am

DIN

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்டிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. பின்னர், 157 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் இன்று (ஜூன் 17) காலை தில்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டு, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், விமானம் மீண்டும் தில்லி புறப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று, ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.