மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் ஒரு போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
சூரிய மின்சக்தி- file photo
Updated On :21 ஜூன் 2025, 11:24 am

DIN

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்கள் ரூ.2.3 கோடி மதிப்பிலான போட்டியில் இடம்பெறுவார்கள். இதில் முதல் பரிசுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் பரிசுக்கு ரூ.50 லட்சம், மூன்றாம் பரிசுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், ஆறுதல் பரிசாக தலா 10 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்தும் பணியை விரைவுபடுத்தவும் விநியோகிக்கவும் ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய புதுமையான 'ஸ்டார்ட்-அப் போட்டியை' மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் கடைசி தேதி ஆகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முடிவுகள் செப்டம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

வெறும் பரிசுத் தொகை மட்டுமல்லாமல், வெற்றியாளர்கள் புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான ஆதரவு மற்றும் முன்னோடி திட்டங்களைத் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்பு மற்றும் உரிமம் பெற்ற நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்று புத்தாக்க திட்டங்களுக்கு உரிமம் பெற்றுத்தரப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.