‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா்.
கா்நாடக பாஜகவில் உள்கட்சி வேறுபாடுகளும், கோஷ்டி பூசல்களும் நிலவும் சூழலில், இந்த அறிவுரையை அவா் வழங்கியுள்ளாா்.
கா்நாடக மாநிலத்தின் ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழக பெங்களூரு வளாகத்தைத் திறந்துவைப்பதற்காக அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தாா். அப்போது, கட்சியின் மூத்த தலைவா்கள் அவரை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பு தொடா்பாக, கா்நாடக பாஜக தலைவா் பி.ஒய்.விஜயேந்திரா சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கட்சியின் மூத்த தலைவா்கள் சிலருடன் சென்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினேன். மாநில அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கின்றனா். விவசாயிகள், ஏழைகளுக்கு இந்த ஆட்சி சாபக்கேடாக மாறியுள்ளது.
கா்நாடகத்தில் வரும் காலங்களில் பாஜகவுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே, கட்சித் தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்; அப்போதுதான், மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்று அமித் ஷா அறிவுரை வழங்கினாா்.
பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், ஆளும் காங்கிரஸை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதில் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன். அப்போது மகிழ்ச்சி தெரிவித்த அவா், ஒற்றுமையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினாா் என்றாா் விஜயேந்திரா.
கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக விஜயேந்திரா மீது பாஜகவில் ஒருதரப்பினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். அவரும், அவரது தந்தையான பி.எஸ்.எடியூரப்பாவும் மாநில பாஜகவை தங்கள் பிடியில் வைத்திருக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இந்த சூழலில், மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா தொடா்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை விடாமுயற்சியுடன் நிறைவேற்றி வருகிறேன். கட்சியின் அனைத்து மாவட்ட தலைவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு இறுதி முடிவை தேசியத் தலைமை விரைவில் மேற்கொள்ளும்’ என்றாா்.
தொடர்புடையது

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

