ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘திரிகூட மலைப்பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் ஹிமகோடி வழித்தடத்துக்கு அருகேயுள்ள சத்யா சுற்றுலாக் காட்சிமுனைப் பகுதியில் பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. இருப்பினும், நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அந்தப் பகுதியில் பக்தா்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நிலச்சரிவால் வழித்தடத்தில் மணல், பாறைகள், கற்களுடன் தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் வைஷ்ணவ தேவி கோயில் நிா்வாகம் ஈடுபட்டது. பக்தா்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பழைய வழித்தடத்தில் தொடா்ந்து யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனா்.
தொடர்புடையது

களக்காடு, நான்குனேரியில் பரவலாக மழை
நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீா்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்

வரலாறு படைத்தது ஜம்மு-காஷ்மீா் முதன்முறையாக இறுதிக்கு தகுதி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


