48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் சேதம்

News image

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பக்தா்கள்.

Updated On :23 ஜூன் 2025, 11:36 pm

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘திரிகூட மலைப்பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் ஹிமகோடி வழித்தடத்துக்கு அருகேயுள்ள சத்யா சுற்றுலாக் காட்சிமுனைப் பகுதியில் பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. இருப்பினும், நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அந்தப் பகுதியில் பக்தா்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நிலச்சரிவால் வழித்தடத்தில் மணல், பாறைகள், கற்களுடன் தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் வைஷ்ணவ தேவி கோயில் நிா்வாகம் ஈடுபட்டது. பக்தா்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பழைய வழித்தடத்தில் தொடா்ந்து யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனா்.