மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!

இடதுசாரி ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் மூன்றாமிடம் மட்டுமே பெற முடிந்தது.

News image

இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி - PTI

Updated On :23 ஜூன் 2025, 12:53 pm

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்த அவரது தந்தை நசீருதின் அஹமது கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் இன்று(ஜூன் 23) அறிவிக்கப்பட்டன. அதில், நசீருதின் அஹமது கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அவரது மகள் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆலிஃபா அஹமது 50,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உதின் ஷேக்கால் இந்த இடைத்தேர்தலில் மூன்றாமிடம் மட்டுமே பெற முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.