மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றில் இன்று (ஜூன் 24) காலை, படகு வீடொன்று பயணம் செய்துள்ளது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே ஆழமானப் பகுதியில் அந்தப் படகு சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவொன்றும், மாநில தீயணைப்புப் படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், அந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தில் பயணிகளின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









