ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிரத்தில் படகு வீடொன்று ஆற்றின் நடுவில் சிக்கியதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றில் இன்று (ஜூன் 24) காலை, படகு வீடொன்று பயணம் செய்துள்ளது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே ஆழமானப் பகுதியில் அந்தப் படகு சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவொன்றும், மாநில தீயணைப்புப் படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், அந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தில் பயணிகளின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com