எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கிம் - மேற்கு வங்கம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது.

News image

நிலச்சரிவினால் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. - எக்ஸ்

Updated On :24 ஜூன் 2025, 1:37 pm IST

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இருமாநிலங்களையும் இணைக்கும் 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தின் செவோகே மற்றும் சிக்கிமின் ராங்போ ஆகிய இருநகரங்களையும் இணைக்கக் கூடிய 52 கி.மீ. நீளமான 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கலிம்போங் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் அந்த நெடுஞ்சாலையின் கலி ஜோரா, சேதி ஜோரா, செல்ஃபி தாரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பாதையை முடக்கியுள்ள பாறைகள் உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கனரக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சாலையை முடக்கியுள்ள பாறைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு வழியில்லாத நிலை உருவாகியுள்ளதால், கலிம்போங் மாவட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.