பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.
Updated on
1 min read

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.

அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள ரோரன்வாலா குர்த் கிராமத்தில் விவசாய நிலையத்தில் துப்பாக்கியின் அடிப்பாகமும், தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.

இதே கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 493 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த பொட்டலம் மஞ்சள் நிற டேப்பால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com