சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் 13 நக்சல்கள் சரணடைந்துள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரணடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்தில் நக்சல்களாக செயல்பட்டு வந்த 8 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இன்று (ஜூன் 27) சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சரணடைந்த 13 பேரையும் காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர்களை பிடிக்க கூட்டாக ரூ.22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தேவி முச்சாகி (எ) பிரமிளா (வயது 21) என்ற பெண்ணை பிடிக்க ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சரணடைந்துள்ளார்.

இத்துடன், சரணடைந்தவர்களில், கோசா ஒயாம் (எ) ரமேஷ் (29) என்பவரின் மீது ரூ.5 லட்சமும், கோசி பொடியம் (27) எனும் பெண்ணை பிடிக்க ரூ.2 லட்சமும் வெகுமதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களுடன், சரணடைந்த சம்மி செம்லா (23), சோட்டு பார்சிக் (25), மோட்டி தட்டி (24), சுனிதா ஹெம்லா (24), மஞ்சுளா குஞ்சம் (27), சயிபோ பொடியம் (18) மற்றும் ஹுங்கி உண்டம் (21) ஆகியோரின் மீது தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது சரணடைந்துள்ள நக்சல்கள் அனவருக்கும் அரசுத் திட்டத்தின் அடிப்படையில், ரூ.50,000 வழங்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் (2025), சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 241 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

13 Naxals wanted with a reward of Rs. 22 lakhs surrendered!

இதையும் படிக்க: இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com