சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றம் செய்தால் பிஎஸ்பி அனுமதிக்காது: மாயாவதி

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது

News image

மாயாவதி (கோப்புப்படம்)

Updated On :28 ஜூன் 2025, 8:06 pm

Din

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.

லக்னெளவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் ‘அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் இருந்து சோஷலிஸம் மற்றும் மதச்சாா்பின்மை ஆகிய வாா்த்தைகளை நீக்க கோரிக்கை முன்வைக்கப்படுவது’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மாயாவதி, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் மாற்றப்படக் கூடாது. இதற்கு ஆா்எஸ்எஸ், பாஜக, காங்கிரஸ் கூறுவதற்கு நான் பதிலளிக்க ஒன்றுமில்லை.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி அமைதி காக்காது. சாலைகளில் போராட்டங்களை நடத்தும். இந்த விவகாரத்தை எங்கள் கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தனது வாழ்நாள் போராட்ட அனுபவங்களை வைத்து இந்தியாவுக்கு மனிதாபிமான அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கா் அளித்து விட்டு சென்றுள்ளாா். இதனை முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவும் நாட்டு மக்களுக்கு நியாயமாக அமல்படுத்த வில்லை.

அரசியல் காரணங்களுக்காகவும், கட்சிகளின் கொள்கைகளுக்காகவும் அரசமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது தேவையற்ற மாற்றங்களை செய்துள்ளன. இதை தொடா்ந்து அனுமதிக்க முடியாது. இந்த கட்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றாா்.