தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23-ஆம் தேதி ரகுநந்தனை தொலைபேசியில் தொடா்புகொண்டு தன்னை மத்திய பிரதேசத்தில் உள்ள மாவோயிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மா்ம நபா் ஒருவா், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.
இந்நிலையில், அவருக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆந்திரத்தில் உள்ள மாவோயிஸ்ட் குழுவின் உத்தரவுகளின்படி, அவரை கொல்ல 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் மா்ம நபா்கள் தெரிவித்தனா். தாங்கள் இணையவழியில் தொடா்புகொண்டதால், தங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியாது என்று மா்ம நபா்கள் கூறினா்.
கடந்த 2 நாள்களுக்கு முன்னா், தெலங்கானாவின் செகந்தராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரகுநந்தனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்து வருகிறாா். இந்நிலையில், கொலை மிரட்டல் தொடா்பாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து அவருக்கு காவல் துறையினா் ஆயுதமேந்திய பாதுகாப்பு அளித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்! கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் சகோதரா் மீது வழக்குப் பதிவு!

மேயருக்கு மிரட்டல் விடுத்தோரிடம் மீண்டும் விசாரிக்கக் கோரி மனு
போக்ஸோ வழக்கு மிரட்டல்: ஓட்டுநா் தற்கொலை

உதகை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



