பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவி ஜிபிஎஸ் நோய்க்கு பலி. ஒரு வாரத்தில் 2-வது மரணம்

News image
கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) - Center-Center-Chennai
Updated On :3 மார்ச் 2025, 11:09 am

DIN

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பலியான மாணவி கௌதமி பிரவீன் என்பதும், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த 58 வயதான நபர், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு பலியான நிலையில், வியாழக்கிழமை, பள்ளி மாணவி பலியாகியிருக்கிறார்.

கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய் என்பது மிகவும் அரிதான நோயாவும், இது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்றும், நேரடியாக இதற்கு சிகிச்சை முறைகள் இல்லை என்பதும், உயிரைக் குடிக்கக் கூடிய நோய் இல்லை என்றாலும், இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இது அதிகம் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

புனேவில் அதிகமாக பரவி வந்த கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய், தற்போது கேரளத்திலும் பரவி வருகிறது. இதன் அறிகுறிகள், தசைத் தளர்வு மற்றும் கை, கால்கள் கூசுதல் போன்றவை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.