சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தேசியக்கொடி மற்றும் இந்திய வீரர்களின் புகைப்படத்துடன் பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூரில் வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரண்ட ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரத்தின் மும்பையில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களால் பெரும்பாலான இடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தன. மூவர்ண கொடியை ஏந்தியவாறு ரசிகர்கள் பாரத் மாதகி ஜே... எனக் கோஷமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ஜம்மு-காஷ்மீரிலும் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி படம்... கண்ணீருடன் கொண்டாட்டம்! ஜனநாயகன் வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகம்!
சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!

ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?

ஆதிக்கம் முடிந்தது! ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



