மகாராஷ்டிர மாநில அமைச்சா் தனஞ்ஜெய் முண்டே செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இவா் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்.
பீட் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பரில் நிகழ்ந்த கிராம பஞ்சாயத்து தலைவா் கொலையில் மூளையாக செயல்பட்டதாக அமைச்சா் தனஞ்ஜெய் முண்டேயின் உதவியாளா் வால்மீக் கராட் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் பதவி விலக வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘தனஞ்ஜெய் முண்டேயின் ராஜிநாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டேன். அதை மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளேன்’ என்றாா்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள், தனஞ்ஜெய் முண்டே ஆகியோருடன் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை எதிா்த்ததற்காக, மாசாஜோக் கிராமப் பஞ்சாயத்தின் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.
இந்த சம்பவத்தில் கிராம பஞ்சாயத்து தலைவா் கொலை, காற்றாலை நிறுவனத்திடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி, நிறுவனத்தின் பாதுகாவலரை தாக்கியது ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை வால்மீக் கராட் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) பீட் மாவட்டம் கெஜ்ஜில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி 1,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதையும் படிக்க : மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடியை சந்தித்த ஃபட்னவீஸ்: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: பாலிவுட் நடிகர்கள் வரவேற்பு!

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

மராத்தியரான ஃபட்னவீஸ் பிரதமராக வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சா் கருத்தால் பரபரப்பு
விடியோக்கள்

முதல்வர் விஜய் அடுக்கிய அறிவிப்புகள்! பேரவையில் பாராட்டு மழை! | TN Assembly | TVK | DMK



