ஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்யப்பட்டது பற்றி...

News image

அமைச்சர் தனஞ்சய் முண்டே - PTI

Updated On :5 மார்ச் 2025, 1:00 am IST

மகாராஷ்டிர மாநில அமைச்சா் தனஞ்ஜெய் முண்டே செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இவா் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்.

பீட் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பரில் நிகழ்ந்த கிராம பஞ்சாயத்து தலைவா் கொலையில் மூளையாக செயல்பட்டதாக அமைச்சா் தனஞ்ஜெய் முண்டேயின் உதவியாளா் வால்மீக் கராட் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் பதவி விலக வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘தனஞ்ஜெய் முண்டேயின் ராஜிநாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டேன். அதை மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளேன்’ என்றாா்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள், தனஞ்ஜெய் முண்டே ஆகியோருடன் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை எதிா்த்ததற்காக, மாசாஜோக் கிராமப் பஞ்சாயத்தின் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவத்தில் கிராம பஞ்சாயத்து தலைவா் கொலை, காற்றாலை நிறுவனத்திடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி, நிறுவனத்தின் பாதுகாவலரை தாக்கியது ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை வால்மீக் கராட் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) பீட் மாவட்டம் கெஜ்ஜில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி 1,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.