/

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யதையடுத்து ஜந்தர் மந்தரில் கொண்டாட்டம் நடைபெற்றது தொடர்பாக..

News image
Updated On :25 ஜூலை 2026, 4:34 pm IST

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்த நிலையில், தில்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பூதாகரமாக வெடித்தது. தேர்வு முறைகேடு சார்பில் கரப்பான் கட்சி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றுவந்த போராட்டத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஜந்தர் மந்தரில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்ட நிலையிலும்கூட இளைஞர்கள் பின்வாங்காமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதனால், ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் கொண்டாட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் நடனமாடியும், உற்சாகக் குரல் எழுப்பியும், மூவர்ணக் கொடியை அசைத்தும், வந்தே மாதரம் என்று முழக்கமிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கரப்பான் கட்சி தலைமையிலான போராட்டக்காரர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து 'சக் தே! இந்தியா' என்ற தேசபக்திப் பாடலுக்கு மேடையில் நடனமாடியும் காணப்பட்டனர்.

அமைச்சரின் ராஜிநாமாவைத் தங்கள் போராட்டத்தின் வெற்றியாகக் கருதி அவர்கள் கொண்டாடியபோது, ​​பலர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவப்படங்களையும் சுவரொட்டிகளையும் ஏந்தியிருந்தனர்.

கூட்டத்தில் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே,

இந்த ராஜிநாமா ஜனநாயகப் போராட்டத்தின் வலிமையை நிரூபிப்பதாகக் கூறினார். இந்திய அரசில் ராஜிநாமாக்கள் நிகழ்வதே இல்லை என்று அவர்கள் கூறுவது வழக்கம். ஆனால், உலகையே பணிய வைக்கக்கூடிய ஒருவர் இருந்தால், உலகம் பணியும் என்று நாங்கள் சொல்கிறோம். இருப்பினும், பிரதானின் ராஜினாமாவுக்குப் பிறகும் போராட்டம் தொடரும் என்று தீப்கே தெரிவித்தார்.

தேர்வு தொடர்பான சர்ச்சையால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டங்களின் போது காவல்துறை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.