ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித வினாத்தாள் எப்படி இருந்தது?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது

News image

சிபிஎஸ்இ தேர்வு - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2025, 4:26 pm IST

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 7,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற கணிதப் பாட வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

பொதுவாக தேர்வெழுதிய மாணவர்களைப் பொருத்தவரை இந்த கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது என்றுதான் கூறியிருக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்ததாகவும், நேரம் போதாமையால் சில மாணவர்கள் சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.

கேள்விகள் கடினமாக இல்லை. ஆனால், அனைத்தையுமே அப்படி சொல்லிவிட முடியாது. வழக்கம்போல நீண்ட வினாத்தாள் சிக்கலால் சில மாணவர்கள் கடைசியாக கேட்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதில் எழுத முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான வினாத்தாள்தான், ஆனால், நீண்ட கணக்குப்போட்டுப் பார்த்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியது இருந்ததால் நேரம்போதவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

பிப்.15ஆம் தேதி தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைகிறது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தப் பொதுத் தேர்வை நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். 10ஆம் வகுப்புக்கு 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்புக்கு 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வுகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.