கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கியது!

நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கப்பட்டது பற்றி...

News image

நீட் மறுதேர்வு. - படம் - பிடிஐ

Updated On :21 ஜூன் 2026, 2:09 pm IST

நாடு முழுவதும் சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதும் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தொடங்கியது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மறுதேர்வு இன்று நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.

இந்த மறுதேர்வை முறைகேடுகளின்றி நடத்துவதற்காக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடையும். 

ஏற்கெனவே, நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிந்ததால், டெலிகிராம் செயலி முடக்கம், வினாத்தாள்கள் ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்று விநியோகம் செய்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The NEET exam, being taken by over 2.27 million candidates across the country, began on Sunday (June 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.