சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

அரசு ஊழியா்களின் ஓய்வு வயதை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை உயா்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

News image

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங். - கோப்புப்படம்.

Updated On :20 மார்ச் 2025, 4:02 am IST

அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை உயா்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு புதன்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்த அவா், ‘தங்களின் ஓய்வு வயதை உயா்த்த வேண்டுமென அரசு ஊழியா்கள் சங்கம் அல்லது அமைப்புகளிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்றாா்.

மத்திய-மாநில அரசு ஊழியா்களின் ஓய்வு வயதில் ஒரே சீரான தன்மை இல்லாததற்கான காரணங்கள் மற்றும் இது தொடா்பான விவரங்களைக் கோரி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இந்த விவகாரம் மாநிலங்கள் பட்டியலில் வருவதால், மத்திய அரசு தரப்பில் விவரங்கள் பராமரிக்கப்படுவதில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.

கூடுதல் ஓய்வூதியம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு வயது முதிா்வு அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை முறையாகவும் உரிய நேரத்திலும் வழங்க மத்திய அரசு அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

‘6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் 80 வயதை எட்டியதும் 20 சதவீதம், 85 வயதை எட்டியதும் 30 சதவீதம், 90 வயதை எட்டியதும் 40 சதவீதம், 95 வயதை எட்டியதும் 50 சதவீதம், 100 வயதை எட்டியதும் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை சிறப்பாக பூா்த்தி செய்யும் நோக்கிலான இந்த கூடுதல் ஓய்வூதியத்தை முறையாகவும், உரிய நேரத்திலும் வழங்க அரசால் அவ்வப்போது வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படி கூடுதல் ஓய்வூதியத்துக்கும் பொருந்தும்’ என்று தனது பதிலில் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.