தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுப்பு

மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

சருராசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர்.

Updated On :21 மார்ச் 2025, 4:38 pm IST

மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் சருராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒன்பது வயது சிறுமி இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறையில், வியாழக்கிழமை மாலை அச்சிறுமி முகாமில் இருந்து காணாமல் போனார்.

அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சிறுமியைத் தேடத் தொடங்கினர். பின்னர் இரவு நேரத்தில் சிறுமியின் சடலம் நிவாரண முகாம் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் சடலத்தில், குறிப்பாக தொண்டையில், இரத்தக் கறைகள் தவிர, பல காயங்கள் இருந்தன.

எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், சடலம் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் குறிபிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.