தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா

இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்..

News image

அமித் ஷா

Updated On :21 மார்ச் 2025, 4:57 pm IST

இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அமித் ஷா, 370-வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் கனவை நரேந்திர மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கு அடிப்படையாக 370வது பிரிவு இருந்தது. ஆனால் அரசியலைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் அதைத் தற்காலிகமாக்கியதோடு, அதை ரத்து செய்வதற்கான வழியும் அந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு வங்கி அரசியல் மற்றும் பிடிவாதத்தால் பிரிவு 370 தொடர்ந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

நாட்டில் இரண்டு தலைவர்கள், இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு கொடிகள் இருக்க முடியாது என்பது நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவு.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 92 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இவற்றைச் சமாளிக்க எந்த அமைப்பும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை, ஆனால் மோடி அரசு அதைச் செய்தது. மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.

பயங்கரவாத சம்பவங்களில் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்வதில்லை.

மோடி ஆட்சியால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் ஏற்படும் இறப்புகள் 70 சதவீதம் குறைந்துள்ளன. பயங்கரவாத சம்பவங்களும் கடுமையாகக் குறைந்துள்ளன.

நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 2019-24 வரை சுமார் 40,000 அரசு வேலைகள் வழங்கப்பட்டன. 1.51 லட்சம் சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, திறன் மேம்பாட்டுக் கழகங்கள் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.