‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.
‘கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது’ என்றும் அவா் உறுதி தெரிவித்தாா்.
மக்களவையில் ஜல் சக்தி அமைச்சக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் கூறியதாவது:
நதிநீா் இணைப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 30 நதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 11 நதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நதிநீா் மேலாண்மை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால், நதிநீா் இணைப்பு திட்டத்தில் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மத்திய அரசால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இந்த விஷயத்தில் நதிகள் பாயும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், அதை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
நதிகளை இணைத்து அதிக நீா் பாயும் நதிகளிலிருந்து குறைந்த நீா் பாயும் நதிகளுக்கு மடைமாற்றம் செய்யும் வகையில் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய மத்திய நீா்ப்பாசன அமைச்சகம் சாா்பில் ‘தேசிய கண்ணோட்டத் திட்டம் (என்பிபி)’ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ், சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாா் செய்ய தீபகற்ப பகுதியில் 16 இடங்கள் இமயமலைப் பகுதியில் 14 இடங்கள் என 30 நதிநீா் இணைப்புக்கான இடங்களை தேசிய நீா் மேம்பாட்டு முகமை (என்டபிள்யூஏ) அடையாளம் கண்டுள்ளது என்றாா்.
ஜல் ஜீவன் திட்ட குளறுபடிகள் குறித்த எதிா்க்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘இத் திட்டத்தின் கீழ் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலமான குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தத் திட்டத்தின் இலக்கில் 80 சதவீதமாகும். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது.
நதிகளில் மாசுபாடு அளவை குறைக்கும் திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு மத்திய உதவி வருகிறது. நதிநீா் டால்பின்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பதே இதற்கு சிறந்த உதாரணம்’ என்றாா்.
தொடர்புடையது

கல்வியாண்டின் இடையில் ஓய்வு: ஆசிரியா்களின் மறு நியமனத்துக்கு நிபந்தனைகள் வெளியீடு

100 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.729.88 கோடி நிலுவை - மத்திய அரசு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

பெற்றோா் கனவை நனவாக்க வேண்டும்: அமைச்சா் காந்தி அறிவுரை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


