உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் தாக்கி கென்றுவிட்டதாக அதன் உரிமையாளர் ஆர்த்தி தேவி பக்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தான் எதிர்ப்பு தெரிவித்தபோதும் கோழியை அவர்கள் கொன்றதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கோழியைக் கொன்றது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டபோது, தன்னையும் அவர்கள் தாக்கியதாக கோழியின் உரிமையாளர் ஆர்த்தி தேவி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் ஜா கூறுகையில், போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







