முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ராகுல் காந்தியின் ‘இரட்டை குடியுரிமை’: ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாக புகார்...

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - PTI

Updated On :25 மார்ச் 2025, 4:05 am IST

லக்னௌ: ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாக கா்நாடக பாஜகவை சோ்ந்த எஸ்.விக்னேஷ் சிசிா் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வழக்கின் விவரம்: ராகுல் காந்தியின் குடியுரிமை பதிவுகள் பற்றிய விவரங்களைக் கோரி பிரிட்டன் அரசுக்கு மனுதாரா் விக்னேஷ் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறாா். இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே, வி.எஸ்.எஸ்.சா்மா என்பவா் இதே கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் வைத்ததை விக்னேஷ் அறிந்து, அவரைத் தொடா்பு கொண்டாா்.

இதையடுத்து, பிரிட்டன் அரசிடமிருந்து தனக்கு வந்த மின்னஞ்சல்களை விக்னேஷிடம் சா்மா பகிா்ந்து கொண்டாா். ‘குடியுரிமை விவரங்களை சம்பந்தப்பட்ட நபரின் (ராகுல் காந்தி) ஒப்புதல் இல்லாமல் தெரிவிக்க முடியாது’ என்று பிரிட்டன் அரசு அந்த மின்னஞ்சலில் பதில் அளித்திருந்தது.

ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதை அந்த நாட்டு அரசு முழுமையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது என்றும், எனவே அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவா் வேண்டுகோள் விடுத்தாா். இது தொடா்பாக அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, அஜய்குமாா் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் அடங்கிய லக்னௌ அமா்வு முன் நடைபெற்றது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு 2 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய அரசு சாா்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் சூா்ய பான் பாண்டே வாதிட்டாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டு, ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கும் அந்த மாதத்தின் 4-ஆவது வாரத்தில் வழக்கின் அடுத்த விசாரணையைப் பட்டியலிடுமாறு அறிவுறுத்தினா்.

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரிவான புகாரைச் சமா்ப்பித்துள்ளதாக மனுதாரா் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.