கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மக்களவையில் அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நாடு முழுவதும் கடைக்கோடி பகுதிகள் வரை கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு கடந்த 2023, பிப்ரவரியில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பஞ்சாயத்துகள்/ கிராமங்களில் புதிய பன்நோக்கு முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால்வளம், மீன்வள கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
2025, ஜனவரி 27 நிலவரப்படி மேற்குறிப்பிட்டுள்ள துறைகளில் புதிதாக 12,957 கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேசிய கூட்டுறவு தரவுதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தானில் 1,995, ஒடிஸாவில் 1,535, உத்தர பிரதேசத்தில் 1,464, ஜம்மு-காஷ்மீரில் 1,118 கூட்டுறவு சங்கங்களும் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பிரதமா் மோடியின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 70% அதிகரிப்பு: அமித் ஷா பெருமிதம்!

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

