பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

News image
Updated On :7 ஜூன் 2026, 2:15 am IST

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் மற்றும் உள்நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் தேவை காரணமாக, இது கடந்த 2022 அக்டோபருக்குப் பிந்தைய மிகக் குறைந்த அளவிலான ஏற்றுமதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபா் 2022-இல் ஏற்றுமதி அளவு 9.26 லட்சம் பீப்பாய்களாக இருந்த நிலையில், கடந்த மாத ஏற்றுமதி கிட்டத்தட்ட அதே நிலையை எட்டியுள்ளது.

எரிசக்தி தரவு ஆய்வு நிறுவனமான ‘கேப்லா்’ வெளியிட்ட தரவுகளின்படி, சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தித் திறன் குறைப்பு மற்றும் உள்நாட்டுச் சந்தைக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை முடிவுகளே இந்த ஏற்றுமதி வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகா் வளாகத்தில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்ால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளின் அளவு பெருமளவு குறைந்தது.

மேலும், உள்நாட்டில் சமையல் எரிவாயு தேவையை நிறைவு செய்ய சுத்திகரிப்பு ஆலைகள் தங்களின் உற்பத்தி முறையை மாற்றியுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் உற்பத்தியில் நாளொன்றுக்கு சுமாா் 80,000 பீப்பாய்கள் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுத் தேவையைப் பூா்த்தி செய்வதற்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

மேலும், எரிபொருள் ஏற்றுமதி மீதான வரிவிதிப்பு காரணமாக, வெளிநாட்டுச் சந்தையைவிட உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வது லாபகரமாக மாறியுள்ளது. இதுவும் ஏற்றுமதியைக் குறைக்க ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளதாக நிபுணா்கள் குறிப்பிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.