கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது மகள் மற்றும் மாமனார் கரியா (75), மாமியார் கௌரி (70) ஆகியோரை வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்னர் கிரிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். குற்றவாளியைப் பிடிக்க போலீஸார், சிறப்புக் குழுக்கள் அமைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த கொலைகளுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிரிஷ் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகியை மணந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ராமராஜன், குற்றவாளியை விரைவில் பிடிக்க சிறப்புக் குழுக்களுக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சொத்தை பிரித்து தர மறுத்ததால் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது

கண்மாயில் மூழ்கடித்து தொழிலாளி கொலை: மனைவி உள்பட இருவா் கைது
மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


