மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத்லாம் மாவட்டத்தில் கிருஷ்ணா என்பவரின் மனைவி நீத்துவுக்கு மார்ச் 23 ஆம் தேதியில் பிரசவ வலி ஏற்பட்டதாகக் கூறி, சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நீத்துவுக்கு பேறு காலம் இன்னும் 2 நாள்கள் இருப்பதாகக் கூறி, அவர்களை செவிலியர்கள் இருவர் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதிகாலை 1 மணியளவில் பிரசவ வலி வந்ததையடுத்து, மீண்டும் சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த முறையும், அவருக்கு குழந்தை பிறக்க 15 மணி நேரம்வரையில் இருப்பதாகக் கூறி, திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில், சுமார் 2 மணிநேரத்தில் நீத்துவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், அவரை அழைத்துச் செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்காததால், அவரை கிருஷ்ணா தள்ளுவண்டியில் அழைத்து சென்றார்.
இதனிடையே, செல்லும் வழியிலேயே குழந்தையின் கால்கள் வெளியே வந்த நிலையில், மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தை முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும், குழந்தை உயிரிழந்து விட்டது.
மகப்பேறுக்காக நீத்துவை தள்ளுவண்டியில் கிருஷ்ணா அழைத்துச் செல்லும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மருத்துவ மையத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி, மருத்துவ மையத்தின் மீது நீத்து புகார் அளித்தார். இதனையடுத்து, செவிலியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பணியில் இருந்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க: ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞா் கைது

கும்மிடிப்பூண்டி: அதிக ரத்தப்போக்குடன் குழந்தை அனுமதி! ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பேட்டி
சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோா் புகாா்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



