தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சத்தீஸ்கா்: ரூ.45 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் நக்ஸல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தா் மண்டலத்தில் மூத்த பெண் நக்ஸல் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :31 மார்ச் 2025, 9:56 pm

Din

தந்தேவாடா: சத்தீஸ்கரில் உள்ள பஸ்தா் மண்டலத்தில் மூத்த பெண் நக்ஸல் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சத்தீஸ்கரும், ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தெலங்கானாவும் அறிவித்திருந்த நிலையில், அவா் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக தந்தேவாடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கெளரவ் ராய் கூறியதாவது: பஸ்தா் மண்டலத்தில் உள்ள தந்தேவாடா, பிஜாபூா் மாவட்ட எல்லையையொட்டி உள்ள காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே திங்கள்கிழமை காலை சுமாா் 9 மணியளவில் மோதல் ஏற்பட்டது.

இருதரப்புக்கும் இடையே சுமாா் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியில் இருந்து கும்மடிவேலி ரேணுகா என்ற மூத்த பெண் நக்ஸலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள கடவேன்டி கிராமத்தை சோ்ந்த அவா், சட்டப் படிப்புப் படித்துள்ளாா். தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியில், கடந்த 1996-ஆம் ஆண்டுமுதல் அவா் செயல்பட்டு வந்தாா் என்றாா்.