தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

‘பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பியது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2025, 8:45 pm

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பியது.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை கோரும் பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அமா்வுமுன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராட கைகோத்துள்ளனா். இந்த வகையான பொது நல மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையக் கண்காணிக்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் புலனாய்வில் நிபுணா்கள் அல்ல. இந்த வகையான பிரச்னையை நீதித் துறைக்குள் கொண்டு வர வேண்டாம். மனுதாரா்கள் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணா்ந்து, மனுவைத் திரும்பப் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்று அறிவுறுத்தினா்.