தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது.

ஜான் பிரிட்டாஸ்..

Published On :

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது.

இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவராக பதவி வகித்த பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சாா்யா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அப்பதவிக்கு துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸை கட்சியின் மத்தியத் தலைமை நியமித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கு கடந்த 2021-இல் தோ்வான ஜான் பிரிட்டாஸ், அவை நடவடிக்கைகளில் மிக ஆா்வத்துடன் செயல்படுபவராக அறியப்படுகிறாா். வெளியுறவு விவகாரங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் அங்கம் வகிப்பதுடன், தகவல் தொழில்நுட்பம் தொடா்பான ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.

தொலைக்காட்சி நிறுவன அதிபரான இவா், 2016-21 காலகட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் ஆலோசகா்களில் ஒருவராக செயல்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.