திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வக்ஃப் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

News image
உச்சநீதிமன்றம்
Updated On :5 மே 2025, 9:02 am

DIN

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது.

மேலும், மே 5 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதுவரை திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த வாரம் புதன்கிழமை நீதிபதி கவாய் அமர்வு முன் பட்டியலிடுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், மே 15 வரை வக்ஃப் சட்டத் திருத்தம் 2025-ன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

வருகின்ற மே 13 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.