
புது தில்லி: இந்திய எல்லைப்புற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, எல்லைப்புற மாநிலங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை பணியாளர்கள் அனைவரும் விடுப்பிலிருந்து உடனடியாக பணிக்கு திரும்பவும் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.