
பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, பதான்கோட், உதம்பூர், ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், அவற்றை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.
இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் விமானப் படையினரும் ராணுவத்தினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி நடத்தியதன் விளைவாக ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையும் படிக்க | போர்ப் பதற்றம்: இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!