ஜம்மு - காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான டிரோன்கள் மீண்டும் நேற்று (ஜன. 16) தென்பட்டன. இதனை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் டிரோன்கள் எல்லையைத் தாண்டும் சம்பவம் நடந்துள்ளது.
இவை பெரும்பாலும் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நுழைவதற்கான வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டிய சம்பா, ராம்கார், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள தேக்வார் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் டிரோன்கள் தென்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினர் இவற்றைத் தாக்கி அழித்தனர். இதோடு மட்டுமின்றி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரையில் 15 டிரோன்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Pakistani drones were spotted along the International Border in Samba and Ramgarh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

நான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக காரணம் இவர்தான்: ஆகிப் நபி

புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



