செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன்கள் எல்லைப் பகுதிகளில் தென்பட்டதையடுத்து, அந்நாட்டுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜனவரி 2026, 8:44 pm IST

பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன்கள் எல்லைப் பகுதிகளில் தென்பட்டதையடுத்து, அந்நாட்டுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுவித்துள்ளது.

அண்டை நாட்டு எல்லைகளில் டிரோன்களின் அத்துமீறிய ஊடுருவல்களை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தானின் டிரோன்கள் நேற்றிரவு தென்பட்டன. இது தொடர்பாக பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, ஜம்மு - காஷ்மீரில் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சூழல் இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறினார்.

ராணுவ வீரர்கள் குழுக்களாக ஆங்காங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தரைவழித் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தென்பட்ட பாகிஸ்தானின் டிரோன்கள் அந்நாட்டு பாதுகாப்பு டிரோன்கள் என்றே நம்புகிறோம். நமக்கு எதிரான செயல்களில் அவை ஈடுபடுகின்றனவா? என கண்காணித்தோம்.

பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் வகையிலான வாய்ப்புகள் எல்லைப் பகுதிகளில் உள்ளனவா? என கண்காணிப்பதற்காகவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரவாதிகள் எல்லைகளில் ஊடுருவி உள்ளே நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன எனக் குறிப்பிட்டார்.

Summary

Army chief issues serious warning to Pakistan over drone sighting at LoC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.