பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகா், சண்டீகா் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால் மே 10-ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மே 8, 9 ஆகிய தேதிகளில் வான்வழியில் பாகிஸ்தான் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தந்தது.
இதையடுத்து, பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
ஸ்ரீநகா், ஜம்மு, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட் உள்பட 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வடஇந்திய மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்களுக்கு தங்களால் இயக்கப்படும் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஷல்ஸ் சென்றாா் பிரதமா் மோடி! தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்!

நாளை முதல் ஜூன் 12 வரை 5 ‘இமு’ ரயில்கள் ரத்து

தமிழ்நாடு முழுவதும் 7,000 பெட்டோல் நிலையங்கள் திடீர் மூடல்! ஏன்?

இஸ்ரேலுக்கான விமான சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா தகவல்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



