தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

போர்ப் பதற்றம் காரணமாக தில்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்..
தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!
Published on
Updated on
1 min read

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 32 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மே 10 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவித்த நிலையில், மக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தற்போது மே 15 வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகளை ரத்து செய்துள்ளது. அதன்படி, தில்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், தில்லிக்கு வரவிருந்த 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தில்லியின் விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com