இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்ட ஒரு பதிவில், ‘விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்தில் தண்டவாளத்தில் ஒரு பயணி இருந்த காரணத்தினால், மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் முறைப்படுத்தப்பட்டன. இதனால், காலை நேரப் போக்குவரத்து நெரிசலின்போது, அந்த வழித்தடத்தில் உள்ள பல நிலையங்களில் காத்திருக்கும் நேரம் அதிகரித்ததுடன், அதிகப்படியான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது’ என்று கூறியுள்ளது.