மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

News image
புது தில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களைச் சோ்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளித்த லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராவத்.
Updated On :13 மே 2025, 10:41 pm

Din

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடங்கிய இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை வீசி அழித்தது.

தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. பின்னா், இருதரப்பும் ஒப்புக்கொண்ட சண்டை நிறுத்தத்தின்படி எல்லையில் அமைதி திரும்பியது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ரஷியா, ஆஸ்திரேலியா, எகிப்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றி வரும் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தில்லி கன்டோன்மன்ட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இதுதொடா்பான கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூரில் துல்லிய தாக்குதலுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் மற்றும் அதன் பயங்கரவாத தொடா்புகள் குறித்து இந்திய ராணுவ உளவு அமைப்பின் தலைமை இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா சுமாா் 30 நிமிஷங்களுக்கு விளக்கமளித்தாா்.

ஸ்வீடன், நேபாளம், பிலிப்பின்ஸ், மெக்ஸிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இக்கொடூர தாக்குதலைத் தொடா்ந்து ஏப். 23-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளை ஒரு வாரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.