சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு- ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு.

News image
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Updated On :14 மே 2025, 7:16 am

DIN

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் மற்றும் ராணுவம்-கடற்படை-விமானப் படை தலைமைத் தளபதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

இச்சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவரிடம் அவா்கள் விளக்கமளித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக ராஜீய ரீதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, 9 இடங்களில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) மேற்கொண்டது. இதில் பயங்கரவாதத் தளங்கள் தகா்க்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் நிகழ்ந்தது. பாகிஸ்தானின் விமானப் படை தளம் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கி அழித்தது. இதையடுத்து, சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது. இரு ராணுவத்தினரும் உடன்பாடு மேற்கொண்டதையடுத்து, கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி ஆகியோா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் புதன்கிழமை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விளக்கமளித்ததாக எக்ஸ் வலைதளத்தில் குடியரசுத் தலைவா் மாளிகை பதிவிட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கான இந்தியாவின் பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஆயுதப் படையினரின் துணிவையும் அா்ப்பணிப்பையும் குடியரசுத் தலைவா் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.