ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

வளைகுடா போர்! சௌதி செல்லும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் சௌதி அரேபியா செல்வது குறித்து..

News image

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் - சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் - (கோப்புப் படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:59 pm IST

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் சௌதி அரேபியாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் தலைமையில் துணைப் பிரதமர் இஷாக் தார், ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்டோர் ஆக. 6 முதல் ஆக. 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் செல்கின்றனர்.

வளைகுடா பகுதியில் போர் நடைபெற்று வரும் சூழலில், ராணுவ ஒப்பந்தமிட்ட சௌதி மற்றும் பாகிஸ்தானிய தலைவர்கள் சந்திக்கும் இந்தப் பயணத்தில் முக்கிய திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பயணத்தில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை சந்திக்கும் பாகிஸ்தானிய தலைவர்கள் இருநாடுகள் இடையேயான எதிர்கால உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், செங்கடல் பகுதியில் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணையைக் கட்டுப்படுத்தி வரும் யேமனின் ஹௌதிகள் அவ்வழியாகச் செல்ல சௌதி அரேபியாவின் கப்பல்களுக்குத் தடை விதித்துள்ளனர்.

இத்துடன், தடையை மீறி பாப் அல்-மண்டாப் வழியாகச் செல்ல முயன்ற சௌதி அரேபியாவின் கப்பல்கள் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், பாப் அல்-மண்டாப் மற்றும் செங்கடல் வழியாகப் பயணிக்கும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய கடல்வழி பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்குவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் கடல்வழி பாதுகாப்பு முயற்சிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan's PM Shehbaz Sharif and Army Chief Asim Munir are visiting Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.