பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் காலணியை வைத்துக்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் அபராதம் செலுத்தி வருகிறார். ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார்.
தற்போது காலணியை வெளியே வைப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பு அபராதத் தொகையை ரூ.200 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், இனி நாளொன்றுக்கு ரூ. 200 அபராதம் செலுத்த வேண்டிய நிலை அந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் பிரிஸ்டீஜ் சன் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்ப்பின் கூட்டமைப்பில், வசித்துவருவோருக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
1,046 வீடுகள் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பினுள் பொதுவான இடங்களில் காலணி அலமாரி (ஷூ ரேக்), பூச்செடிகள், அட்டைப் பெட்டிகள் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற விதியும் உண்டு.
இது குறித்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நான்கு வாரங்களில் குடியிருப்பில் வசித்துவந்த பலரும் தங்கள் பொருள்களை பொதுவான இடமாகக் கருதப்படும், வாசல் வழித்தடங்களில் இருந்து எடுத்துவிட்டனர். இருவர் மட்டுமே இதனைப் பின்பற்றவில்லை.
அதில் ஒருவர் இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டார். மற்றொரு இளைஞர், தனது காலணி வைக்கும் அலமாரியை மாற்றவில்லை.
காலணி அலமாரியை எடுத்து உள்ளே வைப்பதற்கு பதிலாக, பொது இடமான வழித்தடத்தில் வைப்பதற்காக ரூ. 15,000 தொகையை முன் அபராதமாக அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பிடம் செலுத்தியுள்ளார்.
தற்போது 8 மாதங்களுக்கு ரூ.24,000 அபராதமாக செலுத்தியுள்ளார். இன்னும் அவர் தனது காலணி அலமாறியை வழித்தடத்தில் இருந்து எடுக்காததால், அபராதத்தை இனி நாளொன்றுக்கு ரூ.200 ஆக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க | கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாயனூரில் ரூ.850 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

ஆதார் செயலி மூலம் மின்னஞ்சலை இணைக்கலாம்! 6 மாதங்களுக்கு மட்டும் இலவசம்!

டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஒப்பந்தம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: புதிய ஒப்பந்தம் நடைமுறைகளை வகுக்க முடிவு

முதல்வர் விஜய் பிறந்த நாள்... த்ரிஷா ஏன் வாழ்த்தவில்லை?
விடியோக்கள்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3



