மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
கெட் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பலியானவர்கள் மிதாலி விவேக் மோர் (43), மேகா பரத்கர் (22), சௌரப் பரத்கர் (22), நிஹார் மோர் (19) மற்றும் ஷ்ரேயாஸ் சாவந்த் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கெட் அருகே அதிகாலை 5.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
கார் முதலில் சாலையின் தடுப்பில் மோதி ஜக்புடி ஆற்றின் வறண்ட ஆற்றுப் படுகைக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் வறண்டு இருந்ததால், கார் பாறைகளில் மோதியதில் அதில் இருந்த சிலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்தவர்கள் ரத்னகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பால்கர் மாவட்டத்தில் உள்ள நல்லசோபராவிலிருந்து தேவ்ருக் நகரை நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்து: 3 பேர் பலி

மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மராத்தி மொழிப் பாடத்தில் 80,803 பேர் தோல்வி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



