அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.

News image
கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி
Updated On :22 மே 2025, 6:26 am

DIN

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு மேற்கொண்டார்.

பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ரூ.26,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கர்ணி மாதா கோயிலிக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவும் சென்றிருந்தார். கோயிலில் பிரதமரை கௌரவிக்கும் வகையில் கோயில் சார்பில் சிறப்பு சடங்குகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பலானா கிராமத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'அம்ரித் நிலையங்களை' பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

கோயில் கட்டடக்கலையால் ஈர்க்கப்பட்டு, கர்ணி மாதா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையம், வசதிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்குச் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், மதியம் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நளன் விமான நிலையத்திற்குத் திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.