ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அனைவரையும் வெளியேற்றி சோதனை

அனைவரையும் வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

News image
சண்டீகரில் உள்ள பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாா்.
Updated On :22 மே 2025, 8:29 pm

Din

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து, அனைவரையும் வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக சண்டீகா் துணை மண்டல காவல் அதிகாரி உதய்பால் சிங் கூறியதாவது:

பஞ்சாப்-ஹரியாணா உயா் நீதிமன்ற கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதன் பதிவாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடா்பாக தகவல் கிடைக்கப் பெற்றதும், வெடிகுண்டு அகற்றும் நிபுணா்களுடன் காவல் துறையினா் விரைந்து சென்றனா்.

உயா்நீதிமன்ற கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, விரிவான சோதனை நடைபெற்றது. சில மணி நேரங்களுக்கு உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. சோதனையில் சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு உயா் நீதிமன்றம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது என்றாா் அவா்.