அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, கொதிக்கும் சிந்தூர்: பிரதமர் மோடி

ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்..

News image
பிரதமர் மோடி
Updated On :22 மே 2025, 10:12 am

DIN

என் நரம்புகளில் ரத்தமல்ல, கொதிக்கும் சிந்தூர் தான் பாய்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,

பிகானேரில் கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்றேன். ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது. என் மனம் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் ரத்தம் கொதிக்கின்றது. என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, சூடான சிந்தூர்.

ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகமோ, பேச்சுவோ இருக்காது, பேச்சு நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் தான்.

இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். பஹல்காமில் இந்திய பெண்களின் நெற்றிப்பொட்டான சிந்தூர் அழிக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர். அவர்களுக்குக் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்க இந்தியா முடிவு செய்தது.

இதன் காரணமாகவே ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத தளங்களையும் 22 நிமிடத்தில் இந்தியப் படைகள் அழித்துள்ளனர். நமது முப்படைகளில் சக்கர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்குப் பாகிஸ்தான் பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்து அதை நிரூபித்துள்ளனர்.

இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டன. இந்தியா அமைதியாக இருக்கும் என்று எண்ணியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று அவர் பேசினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா சார்பில் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.