மழை தொடர்பான சம்பவங்கள்: உ.பி.யில் 49 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அப்போது மரங்கள் விழுந்தும், சுவர்கள் இடிந்து விழுந்தும் மற்றும் மின்னல் தாக்கியும் 49 பேர் பலியானதாக பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதன்படி காஸ்கஞ்ச் மற்றும் ஃபதேபூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், மீரட், அவுரையா மாவட்டங்களில் தலா 4 பேரும், புலந்த்ஷஹர், கௌதம் புத்த நகர், கன்னோஜ், கான்பூர் நகர் மற்றும் எட்டாவில் தலா 3 பேரும் பலியாகினர்.
மேலும் காசியாபாத், ஃபிரோசாபாத், எட்டாவா மற்றும் கான்பூர் தேஹாத் ஆகிய இடங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா 2 பேர் பலியாகினர்.
இதனிடையே பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு நிவாரண ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...