மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தாணே: 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :24 மே 2025, 12:44 pm IST

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரிடமும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாணே நகராட்சி ஆணையர் சௌரப் ராவ், பொதுநலத் துறை மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் தயார்நிலையில் இருக்கவும், கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, அம்மாநில தலைமைச் சுகாதார ஆணையர் மருத்துவர் சேத்னா நிதில், உயர்நிலை அதிகாரிகளுடன் நேற்று (மே 23) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதன்பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

’தேவையான அளவுக்கு மருந்துக்கள் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் சேமிக்கப்பட்டுள்ளன மற்றும் கரோனா பரிசோதனைக் கருவிகளும் தயார்நிலையிலுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா சிகிச்சைக்காக அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார்நிலையிலுள்ளதாகவும், இந்தத் தொற்றுப் பரவல் தற்போது கட்டுப்பாட்டிலுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.